Monday, 23 November 2015

அன்பு



"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது".
"
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உடையார் பிறர்க்கு".
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அன்பை எதிர்பார்கின்றனர் ஆனால் நாம் அன்பை கொடுக்கவே பிறந்திருக்கின்றோம். ஒருவருக்கு அன்பை எதிர்பார்த்து அது கிடைக்காத நேரத்தில் ஏக்கம் வருகிறது. நாளடைவில் ஏக்கம் ஏமாற்றமாக மாறுகிறது. அந்த ஏமாற்றம் கவலை ஏற்படுத்துகின்றது. அந்த கவலை கோபத்தை உருவாக்குகிறது. நாள் பட்ட கோபம் வஞ்சத்தை உருவாக்குகிறது. இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவாக்குகிறது. இந்த கருத்து வேறுபாட்டால் குடும்பத்தில் பிரிவினை ஏற்படுகின்றது. இந்த பிரிவினை உயர்வு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இந்த மனப்பான்மையால் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போகிறது. 
நாம் மற்றவரிடத்தில் அன்பை எதிர்பார்க்காமல் அன்பை கொடுக்க பழகிகொண்டால் அந்த அன்பு மற்றவருக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதனால் நமக்கு மன நிறைவு ஏற்படுகின்றது. நாம் அன்பை எதிர்பார்க்காமால் மற்றவருக்கு அன்பை கொடுப்பதால் நமக்கு ஏக்கம் வர வாய்ப்பில்லை. ஏக்கம் இல்லாததால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.இதனால் கவலை இல்லை. கவலை இல்லாததால் கோபம் இல்லை. கோபம் இல்லாததால் வஞ்சம் இல்லை. வஞ்சம் இல்லாததால் கருத்து வேறுபாடு இல்லை. இதனால் பிரிவினை இல்லை. இதனால் உயர்வு தாழ்வு மனப்பான்மை இல்லை. இதனால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

No comments:

Post a Comment