ஒரு ஊரில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.
அது துறவியிடம் சென்று பூனை தொல்லை தாங்கவில்லை ஆகையினால் என்னை பூனையாக மாற்றிவிடுங்கள் சுவாமி என்று வேண்டிகொண்டது.
அதே போல் எலியை பூனையாக மாற்றிவிட்டார் துறவி.
மறுபடியும் பூனையாக மாறிய எலி நாய் தொல்லை தாங்கவில்லை என்றும் தன்னை நாயாக மாற்றுமாறும் துறவியிடம் சென்று வேண்டி கொண்டது.
பிறகு நாயாக மாறிய தன்னை மாடு முட்டுகிறது என்றும் தன்னை மாடாக மாற்றுமாறும் வேண்டியது.
பிறகு புலியால் மாட்டிற்கு ஆபத்து என்று புலியாக மாற்ற வேண்டிகொண்டது.
பிறகு புலிக்கு வேட்டைகார மனிதனிடம் இருந்து ஆபத்து என்று மனிதனாக வேண்டி மனிதனாக அந்த எலி மாறியது.
கடைசியில் மனிதனாக மாறிய எலி மறுபடியும் துறவியிடம் சென்று சுவாமி மற்ற மிருகங்களை காட்டிலும் மனிதனே மிகவும் ஆபத்தானவன்.
மனிதனுக்கு மனிதன் குணத்தில் மாறுபடுகிறான். இப்போது நான் என்ன செய்வது என்று துறவியின் காலில் விழுந்து வேண்டி கொண்டது அந்த மனிதனாக மாறிய எலி.
இதை கேட்ட துறவிக்கு கோபம் வந்துவிட்டது. துறவி ஆரம்பத்தில் எலியாக வந்த அந்த மனிதனை பார்த்து : இவ்வளவு உயிரினங்களாக மாறிய உனக்கு அந்த' எலி புத்தி மட்டும் மாறவில்லையே' என்று கோபம்கொண்டு, எப்போதும் எலியாக இருக்க தான் நீ லாயக்கி என்று கூறி அந்த மனிதனை கடைசியில் எலியாக மாற்றிவிட்டார்.
வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று சிறந்ததாக போய் கொண்டே இருக்கும். அதற்க்கு முடிவே இல்லை. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று சிறந்ததாக போய் கொண்டே இருக்கும். அதற்க்கு முடிவே இல்லை. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை.