Wednesday 25 March 2015

அதிருப்தியாளர்கள்


ஒரு ஊரில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.
அது துறவியிடம் சென்று பூனை தொல்லை தாங்கவில்லை ஆகையினால் என்னை பூனையாக மாற்றிவிடுங்கள் சுவாமி என்று வேண்டிகொண்டது.
அதே போல் எலியை பூனையாக மாற்றிவிட்டார் துறவி.
மறுபடியும் பூனையாக மாறிய எலி நாய் தொல்லை தாங்கவில்லை என்றும் தன்னை நாயாக மாற்றுமாறும் துறவியிடம் சென்று வேண்டி கொண்டது.
பிறகு நாயாக மாறிய தன்னை மாடு முட்டுகிறது என்றும் தன்னை மாடாக மாற்றுமாறும் வேண்டியது.
பிறகு புலியால் மாட்டிற்கு ஆபத்து என்று புலியாக மாற்ற வேண்டிகொண்டது.
பிறகு புலிக்கு வேட்டைகார மனிதனிடம் இருந்து ஆபத்து என்று மனிதனாக வேண்டி மனிதனாக அந்த எலி மாறியது.
கடைசியில் மனிதனாக மாறிய எலி மறுபடியும் துறவியிடம் சென்று சுவாமி மற்ற மிருகங்களை காட்டிலும் மனிதனே மிகவும் ஆபத்தானவன்.
மனிதனுக்கு மனிதன் குணத்தில் மாறுபடுகிறான். இப்போது நான் என்ன செய்வது என்று துறவியின் காலில் விழுந்து வேண்டி கொண்டது அந்த மனிதனாக மாறிய எலி.
இதை கேட்ட துறவிக்கு கோபம் வந்துவிட்டது. துறவி ஆரம்பத்தில் எலியாக வந்த அந்த மனிதனை பார்த்து : இவ்வளவு உயிரினங்களாக மாறிய உனக்கு அந்த' எலி புத்தி மட்டும் மாறவில்லையே' என்று கோபம்கொண்டு, எப்போதும் எலியாக இருக்க தான் நீ லாயக்கி என்று கூறி அந்த மனிதனை கடைசியில் எலியாக மாற்றிவிட்டார்.
வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று சிறந்ததாக போய் கொண்டே இருக்கும். அதற்க்கு முடிவே இல்லை. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை. 

மனம் ஒரு கோயில்



உயிர், உடல் இரண்டையும் பாதுகாக்கும் கவசமே நம் மனம். . .     பாதுகாக்கவேண்டிய மனம் உயிரையும், உடலையும் எப்போதும் தாக்கிக்கொண்டே இருக்கிறது. . ஆம் தெளிவில்லாமல் எப்போதும் குழப்பமடைந்து கொண்டே இருப்பதால் உயிரையும், உடலையும் தாக்குகின்றது. .   ஆரோக்கியம் கெடுவதற்கும், மரணங்கள் ஏற்படுவதற்கும் முக்கிய காரணம் மனமே. 
குழப்பமான மனிதர்களிடம் பழகுவது, குழப்பமான தொலைக்காட்சி நிகழ்சிகளையே பார்ப்பது, குழப்பமான விஷயங்களையே தேடுவது, பேசுவது, சிந்திப்பது, படிப்பது போன்றவை குழப்பத்திற்கு முக்கிய காரணம். எப்படி ஒரு கூடை மாம்பழத்தில் ஒரு மாம்பழம் அழுகி போனால் மற்ற மாம்பழம் எல்லாம் கெட்டுவிடுமோ அதே போல் நல்ல முற்போக்கு சிந்தனையாளர்கள் (POSITIVE MIND) மத்தியில் ஒரு குழப்பம் செய்யும் மனிதர் (NEGATIVE MIND) இருந்தால் அனைவரையும் கெடுத்து விடுவார். ALWAYS BE POSITIVE...

குடி


குடிப்பவர்கள் குடி தனக்கு சந்தோஷத்தை தருகிறது என்ற நினைப்பில் தான் தினமும் குடிக்கின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று நமது ஆறாம் அறிவு கொண்டு சிந்திப்போமா........
*சந்தோஷம் கிடைக்கும் என்று பாருக்கு செல்பவர்கள் குடிக்கும் போது *தன் சந்தோசம் இழந்து வாக்குவாதம் செய்கின்றனர். 
*
இதனால் பெரும்பாலானோர் கோபம் அடைகின்றனர்......
*
இதனால் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது.....
*
இதனால் சண்டை போடுகின்றனர்....
*
போதை தலைக்கு ஏற ஏற என்ன நடக்கிறது என்பதை மறக்கின்றனர்.
*
குடிப்பதற்கு அந்த பார் பக்கம் யாரும் பார்க்காமல் இருக்கும் பொது உள்ளே சென்ற நாம் குடித்த பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊரே பார்க்கும்படி பார் வாசலிலேயே நின்று போதையில் நின்று ஆடிக்கொண்டே கத்தி கத்தி பேசி கொண்டிருப்போம் .....
*
நண்பர்கள் குடியால் சண்டை போட்டு ஜென்ம விரோதி ஆகின்றனர்..
*
பிறகு வீட்டிற்கு போதையுடன் வண்டியில் வரும்போது நிறைய பேருக்கு விபத்து ஏற்படுகிறது....
*
சிலர் விபத்தில் மரணம் கூட ஏற்படுகிறது......
*
வீட்டில் மனைவுடன் அல்லது அம்மாவிடம் சண்டை ஏற்படுகிறது....
*
காலை எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கிறது.....
*
வேலைக்கு போகவோ - தொழில் செய்யவோ கடுப்பாக இருக்கிறது..
*
அந்த நாள் முழுதும் எதையோ இழந்ததை போல் வெறுப்பாக நாள் செல்லும்....
*
எந்த ஒரு செயலிலும் உற்சாகம் இருக்காது...
*
நேற்று சந்தோஷம் என நினைத்து குடித்ததை நினைத்து கேவலமாக உணர்வோம்.....
*
குடிப்பவருக்கே பக்க வாதம் வருகிறது....
*
குடிப்பவருக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது...
பாலியல் பலாத்காரம்,,கொலை, கொள்ளை உருவாக முழு காரணம் குடியே.
நமது மானம் போகிறது
மதிப்பு போகிறது
மரியாதை போகிறது
அன்பு தொலைகிறது
பண்பு போகிறது 
பாசம் மறைகிறது 
பணம் போகிறது 
ஆரோக்கியம் போகிறது 
ஆயுள் போகிறது 
இதற்க்கு பேரா 'SITTING'
மொத்தத்தில் வாழ்க்கையே போகிறது 
சந்தோஷம் என்று தானே குடிக்க செல்கிறோம்.. எங்கே சந்தோஷம்..
உண்மையில் இதன் பேரா சந்தோஷம்....
சந்தோஷம் என்பது அவரவரே சுயமாக முடிவு எடுத்துகொள்வதே.
இது பழக்க பதிவு.. நம் மூளையில் நாம் குடித்தால் சந்தோசம் என்று நம்மை நாமே ஏமாற்றி பதிய வைத்துகொள்வது.
"
குடி குடியை கெடுக்கும் அன்று 
குடி வம்சத்தையே கெடுக்கும் இன்று" 
"
மாற்றங்கள் நிறைந்தது மனித வாழ்க்கை 
மாறாதவன் மாண்டு போவான்." 


பணக்கார பிச்சைகாரன்


ஒரு ஊரில் மிக பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் சுமார் இருபது வருடங்களாக ஆடைகளையும், ஆபரணங்களையும், பணத்தையும் சேர்த்து சேர்த்து வீட்டில் பதுக்கி வைத்து கொண்டார். அவர் செல்வங்களை எல்லாம் அனுபவிக்காமல், யாருக்கும் கொடுக்காமல் மறைத்து வைத்துகொண்டு வாழ்ந்து வந்தார். தன் மனைவி மக்களையும் சுக போக வாழ்வு வாழ விடாமல் கஷ்டத்திலேயே வாழ வைத்து வந்தார். 
ஒரு நாள் அந்த வழியாக துறவி வருவதை உணர்ந்த செல்வந்தர் அவரின் காலில் விழுந்து வணங்கி தனக்கு செல்வம் மேலும் மேலும் குவியவேண்டும் என்று வேண்டிகொண்டார். அதற்கு துறவி செல்வந்தரிடம் நீ உன்னிடம் இருக்கும் அணைத்து செல்வங்களையும் மூட்டை கட்டி கொண்டு என்னுடன் வா என்று துறவி கூறினார். அவ்வாறே அந்த செல்வந்தர் தன் செல்வங்களை எல்லாம் மூட்டை கட்டி கொண்டு துறவியுடன் காட்டிற்கு சென்றார். 
காட்டில் பெரிய குழி நோண்டி அதில் இந்த செல்வதை எல்லாம் புதைக்க சொன்னார் துறவி. மேலும் துறவி செல்வந்தரிடம் நீ ஒரு மாதம் கழித்து வா இந்த செல்வம் எல்லாம் பல மடங்கு பெருகி உனக்கு கிடைக்கும். ஒரு மாதம் கழித்து புதைத்து வைத்த மூட்டையை திறந்து பார்த்த செல்வந்தன் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அந்த மூட்டையில் வெறும் செங்கல் குவிக்க பட்டிருந்தது. துறவியை பார்த்து செல்வந்தன் கதறினான். என் செல்வம் எல்லாம் இப்படி வெறும் கற்களாக மாறிய காரணம் என்ன என்று துறவியிடம் புலம்பினான் செல்வந்தன். 
இதை கேட்ட துறவி செல்வந்தனிடம் :நான் தான் பணத்திற்கு பதில் இதில் செங்கல் வைத்தேன். நீ இருபது வருடமாக இவ்வளவு செல்வம் சேர்த்தும் என்ன பயன். இதனால் உனக்கும் பலனில்லை யாருக்கும் பலனில்லை. நீ வீட்டில் இவ்வளவு காலம் வைத்திருந்ததும் செல்வம் போல் உள்ள இந்த கற்களையே. இதனால் இந்த மூட்டையில் பணம் இருந்தாலும் ஒன்று தான் அதில் செங்கல் இருந்தாலும் ஒன்று தான் என்று செல்வந்தனின் பேராசையும், கஞ்சத்தனத்தையும் உணர்த்தினார். 
நாம் சம்பாதிக்கும் பணத்தில் 5% ஆவது வாழ்வில் கஷ்டபடுபவருக்கு கொடுத்தால் திருப்தியும் கிடைக்கும் வளமாகவும் அனுபவித்து வாழலாம்.....


Friday 20 March 2015

ஆளுமை


மான் தனக்கு தேவையான இரையை விரிந்த நிலபரப்பில் உள்ள புல்லை ஒரு 
நாளெல்லாம் சிறிது சிறிதாக மேய்ந்து கொண்டிருக்கும் ஆனால் புல் புதருக்கு பின்னே 
அமர்ந்திருக்கும் புலியானது நாளெல்லாம் அமைதியாக அமர்ந்திருக்கும். புலிக்கு 
பசிக்கும் பொது ஒரே நிமிடத்தில் அமைதியாக இருந்த புலி பாய்ந்து ஓடி மானை அடித்து 
தின்றுவிடும். 

நாம் மான் போன்று சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெருமையாக 
பேசிக்கொண்டு இல்லாமல் எப்போதும் அமைதியாக இருந்து தேவையான நேரத்தில் நமது முழு திறமையை ஒரு புலியை போல வெளிபடுத்தினால் அதுவே சிறந்த ஆளுமை ஆகும்.

கருத்தடை



ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்ணடிமை... உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகள் நடந்து வந்தன.. பிறகு சிறிது சிறிதாக நிலைமை மாறி காந்தி சொன்ன   பெண்கள் எப்போது   இரவு  நேரத்தில் நகையெல்லாம் போட்டுகொண்டு பயம் இல்லாமல் போகிறார்களோ  அன்று தான் சுதந்திரம் என்பதை தற்போது IT வேலைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இரவில் சென்று பணிபுரிவதை பார்க்கிறோம்... இதே போல் பெண்ணுக்கு இருக்கும் கற்ப பையை காரணம் காட்டி ஆண்கள் பெண்கள் தான் கருத்தடை செய்யவேண்டும் என்று காலம் காலமாக பெண்ணை அடிமை படுத்தும் வழக்கத்திலே பெண்களுக்கு தான் கருத்தடை செய்யவேண்டும் என்ற முறையிலே வாழ்ந்தனர். தற்போது பெண்களில் மேலை நாட்டு கலாச்சாரத்தில் இந்த நிலை பெண்களுக்கு வந்துவிட்டது.அங்கு ஆண்களும் கருத்தடை செய்து கொள்கின்றனர். ஆனால் அங்கெல்லாம் கூடவே பெண்கள் வாழும் முறையும் பெரும்பாலும் சீரழிந்து விட்டது. நம் நாட்டில் பெண்கள் அடிமைகளாய் இருந்த காலத்தில் பெண்களுக்காக குரல் கொடுக்கும் தைரியம் பெண்களுக்கு இல்லை. ஆனால் தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் பெண்கள், உயர் பதவியை வகிக்கும் பெண்கள் , அரசியலில் முதன்மையாய் விளங்கும் பெண்கள், கார், பஸ் , விமானம், ரயில், மோட்டார் பைக் போன்ற வாகனங்களை ஓட்டும் பெண்கள், IT யில் அதிகாரிகளாக பணிபுரியும் பெண்கள் நினைத்தால் , மருத்துவராக பணிபுரியும் பெண்கள் நினைத்தால், ஆசிரியராக பணிபுரியும் பெண்கள் நினைத்தால், சமூக சேவகியாக விளங்கும் பெண்கள் நினைத்தால்....இன்னும் சொல்லி கொண்டே போகலாம் (விகிதாசாரத்தில் குறைவாக இருந்தாலும்) எப்படி உடன்கட்டை நிலை மாறியதோ - எப்படி பெண்களின் ஆடை பாவாடையிலிருந்து ஜீன்ஸ், சுடிதார் அணியும் நிலை மாறியதோ - மேடையில் பேசும் திறனில் மாறியதோ - எப்படி உங்களை போல் பெண்களின் முற்போக்கு சிந்தனை மாறியதோ - ஆட்சியில் மாறியதோ - பனி புரியும் நேரம் இரவாக மாறியதோ, எப்படி சினிமா இயக்குனராக பெண் இயக்கம் மாறியதோ, எப்படி திரைபடத்தில் பெண் கவிஞர் கவிதை எழுதுவதில் மாறியதோ, ஆண்கள் சில்மிஷம் செய்தால் அவர்களை தட்டி கேட்கும் தைரியத்தில் மாறியதோ, அதே போல் நிச்சயம் இந்த கருத்தடை விஷயமும் நிச்சயம் ஒரு நாள் மாறும்.. ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம்... இது வெறும் வார்த்தையிலே அன்று 
ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் .... பெண்கள் ஒன்றுபட்டால் இன்று

Thursday 19 March 2015

கடவுள்


எனக்கு தெரிந்தவை...................... 
பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஓரறிவு தாவரம் முதற்கொண்டு ஆறறிவு மனிதன் வரை அனைத்து உயிரினங்களும் கடவுள் என்னும் மஹாசக்தி மூலம் படைக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.....
இன்றோ கடவுளை மனிதன் படைக்கிறான்.....
கடவுளை தரிசிக்க சாதா விலை, ஸ்பெஷல் விலை என்று நிர்ணயிக்கிறான்....
கடவுளை உருவாக்குகிறான்.....
கடவுளில் உயர்ந்த கடவுள் எது தாழ்ந்த கடவுள் எது என்று பிரித்து பார்க்கின்றான்... கடவுளுக்கு விளம்பரம் தேடுகிறான் .....
கடவுளிடமே வியாபாரம் பேசுகிறான்.... 
கடவுளின் சக்தியை அளக்கிறான் ...
கடவுளுக்குள்ளேயே போட்டி போடுகிறான்.....
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் பூமியின் அளவு என்பது பெருங்கடலில் மிதக்கும் ஒரு சிறு கடுகு போன்றது. பூமியே கடுகு என்றால் அதில் மனிதன் எம்மாத்திரம். பிரபஞ்ச ரகசியங்களில் இன்னும் ஒரு சதவிகிதத்தை கூட கண்டு பிடிக்க முடியாத இந்த மனிதன் இதை உணர்ந்தபாடில்லை. இவனுக்கு கடவுள் கொடுத்த வர பிரசாதமாகிய ஆறு அறிவு மூலம் அவனே கடவுளாகவும் தன்னை உருவாக்கிகொள்ள முயற்சி செய்கின்றான்.
கடவுள் ஒரு மஹாசக்தி..... தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.. 
உன் மனதை அமைதி படுத்தி உனக்குள்ளே உயிர் சக்தியில் இறைவன் இருப்பதை ஆராய்ந்து உணர முயற்சிக்கும் ஒரு கருவியே ஆறாம் அறிவு....
'
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகின்றான் ஞான தங்கமே '
பெரும்பாலான கோயில்களில் பொறித்திருக்கும் வாசகம் "அஹம் பிரம்மாஸ்மி " இறைவன் உனக்குள்ளே இயங்குகிறான். 


சுய பரிசோதனை


ஒருவருக்கு 
ரோதனை
சோதனை
வேதனை
இவை மூன்றும் எந்த போதனைகளாலும் தன்னை விட்டு விலகாது......
தன் பலம், பலவீனம் இவை இரண்டையும் தானே உணர்ந்து 
பலத்தை நாளுக்கு  நாள் கூட்டியும், தன் பலவீனத்தை நாளுக்கு நாள் குறைத்தும் 
தன்னை "சுய பரிசோதனை"(SELF ESTEEM ) செய்து தன் தவறுகளை திருத்திகொள்ளும் பொது தான் 
"ரோதனை-சோதனை-வேதனை" விலகி 
அது சாதனையாக மாறும்............
சிந்திப்போம்........உணர்வோம்..........


நீ


தொலைநோக்கு கருவியில் வானத்து அற்புதங்களை ஆராய்ந்தவன் "விஞ்ஞானி"

உயிர்நோக்கு பார்வையில் தன் உள்ளே இருக்கும் அற்புதங்களை 
ஆராய்ந்தவன் "மெய்ஞானி"

நடப்பவை எதுவாகினும் அதை முற்றிலும் ஏற்றுக்கொண்டவன் "ஞானி" 

எப்போதும் பிரச்சனைகளையே ஆராய்ந்து குழப்பி கொண்டிருப்பவன் "பாழ் நீ"..................