Wednesday, 25 March 2015

குடி


குடிப்பவர்கள் குடி தனக்கு சந்தோஷத்தை தருகிறது என்ற நினைப்பில் தான் தினமும் குடிக்கின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று நமது ஆறாம் அறிவு கொண்டு சிந்திப்போமா........
*சந்தோஷம் கிடைக்கும் என்று பாருக்கு செல்பவர்கள் குடிக்கும் போது *தன் சந்தோசம் இழந்து வாக்குவாதம் செய்கின்றனர். 
*
இதனால் பெரும்பாலானோர் கோபம் அடைகின்றனர்......
*
இதனால் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது.....
*
இதனால் சண்டை போடுகின்றனர்....
*
போதை தலைக்கு ஏற ஏற என்ன நடக்கிறது என்பதை மறக்கின்றனர்.
*
குடிப்பதற்கு அந்த பார் பக்கம் யாரும் பார்க்காமல் இருக்கும் பொது உள்ளே சென்ற நாம் குடித்த பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊரே பார்க்கும்படி பார் வாசலிலேயே நின்று போதையில் நின்று ஆடிக்கொண்டே கத்தி கத்தி பேசி கொண்டிருப்போம் .....
*
நண்பர்கள் குடியால் சண்டை போட்டு ஜென்ம விரோதி ஆகின்றனர்..
*
பிறகு வீட்டிற்கு போதையுடன் வண்டியில் வரும்போது நிறைய பேருக்கு விபத்து ஏற்படுகிறது....
*
சிலர் விபத்தில் மரணம் கூட ஏற்படுகிறது......
*
வீட்டில் மனைவுடன் அல்லது அம்மாவிடம் சண்டை ஏற்படுகிறது....
*
காலை எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கிறது.....
*
வேலைக்கு போகவோ - தொழில் செய்யவோ கடுப்பாக இருக்கிறது..
*
அந்த நாள் முழுதும் எதையோ இழந்ததை போல் வெறுப்பாக நாள் செல்லும்....
*
எந்த ஒரு செயலிலும் உற்சாகம் இருக்காது...
*
நேற்று சந்தோஷம் என நினைத்து குடித்ததை நினைத்து கேவலமாக உணர்வோம்.....
*
குடிப்பவருக்கே பக்க வாதம் வருகிறது....
*
குடிப்பவருக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது...
பாலியல் பலாத்காரம்,,கொலை, கொள்ளை உருவாக முழு காரணம் குடியே.
நமது மானம் போகிறது
மதிப்பு போகிறது
மரியாதை போகிறது
அன்பு தொலைகிறது
பண்பு போகிறது 
பாசம் மறைகிறது 
பணம் போகிறது 
ஆரோக்கியம் போகிறது 
ஆயுள் போகிறது 
இதற்க்கு பேரா 'SITTING'
மொத்தத்தில் வாழ்க்கையே போகிறது 
சந்தோஷம் என்று தானே குடிக்க செல்கிறோம்.. எங்கே சந்தோஷம்..
உண்மையில் இதன் பேரா சந்தோஷம்....
சந்தோஷம் என்பது அவரவரே சுயமாக முடிவு எடுத்துகொள்வதே.
இது பழக்க பதிவு.. நம் மூளையில் நாம் குடித்தால் சந்தோசம் என்று நம்மை நாமே ஏமாற்றி பதிய வைத்துகொள்வது.
"
குடி குடியை கெடுக்கும் அன்று 
குடி வம்சத்தையே கெடுக்கும் இன்று" 
"
மாற்றங்கள் நிறைந்தது மனித வாழ்க்கை 
மாறாதவன் மாண்டு போவான்." 


No comments:

Post a Comment