Wednesday, 25 March 2015

மனம் ஒரு கோயில்



உயிர், உடல் இரண்டையும் பாதுகாக்கும் கவசமே நம் மனம். . .     பாதுகாக்கவேண்டிய மனம் உயிரையும், உடலையும் எப்போதும் தாக்கிக்கொண்டே இருக்கிறது. . ஆம் தெளிவில்லாமல் எப்போதும் குழப்பமடைந்து கொண்டே இருப்பதால் உயிரையும், உடலையும் தாக்குகின்றது. .   ஆரோக்கியம் கெடுவதற்கும், மரணங்கள் ஏற்படுவதற்கும் முக்கிய காரணம் மனமே. 
குழப்பமான மனிதர்களிடம் பழகுவது, குழப்பமான தொலைக்காட்சி நிகழ்சிகளையே பார்ப்பது, குழப்பமான விஷயங்களையே தேடுவது, பேசுவது, சிந்திப்பது, படிப்பது போன்றவை குழப்பத்திற்கு முக்கிய காரணம். எப்படி ஒரு கூடை மாம்பழத்தில் ஒரு மாம்பழம் அழுகி போனால் மற்ற மாம்பழம் எல்லாம் கெட்டுவிடுமோ அதே போல் நல்ல முற்போக்கு சிந்தனையாளர்கள் (POSITIVE MIND) மத்தியில் ஒரு குழப்பம் செய்யும் மனிதர் (NEGATIVE MIND) இருந்தால் அனைவரையும் கெடுத்து விடுவார். ALWAYS BE POSITIVE...

No comments:

Post a Comment